நான் திருநங்கையா? மும்பை சென்று கதறும் பிக்பாஸ் மீரா மிதுன்..!


பிக்பாஸ் மீரா தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர் இதில் மாடல் அழகியான மீரா மிதுன் ஒருவராவார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்கள் சாக்ஷி , அபிராமி ஆகியோர் மீராவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருவதாக அவர் தற்போது குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஜோ மைக்கல் என்பவருடன் இணைந்து அபிராமி மற்றும் சாக்ஷி ஆகியோர் மீராவை சமூகவலைத்தளத்தில் தவறாக பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் பல தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தும் அதில் நடிக்க முடியாமல் இருக்கிறாராம் மீரா மிதுன். இதனை அடுத்து தமிழ் படமே தேவை இல்லை என்று மீராமிதுன் தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவிற்கு சென்றுள்ளார்.

மீராவிற்கு மும்பையில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பிற்காக டெஸ்ட் ஷூட் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு எடுத்த வீடியோக்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார் மீரா. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மீராவை கண்டபடி கிண்டலடித்து வந்தனர் . மேலும் சிலர் சிலர் அவருக்கு வாழ்த்து செய்தியும் கூறி வந்தனர்.

இதனையடுத்து மீரா வேறு ஒரு வீடியோ பதிவையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ பதிவில் மீரா பேசுகையில், தமிழ்நாட்டில் தான் என் பட வாய்ப்புகளை பலரும் சீர் அழித்தனர். ஆகையால் தான் மும்பைக்கு வந்தேன்.

இங்கேயும் என்னை ஒரு சிலர் நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள். ஆகையால் இன்று நான் மும்பையை விட்டு பேக்கப் செய்து கிளம்புகிறேன் என்று கூறினார் மீரா. என்னை இழிவுபடுத்தும் விதமாக பல கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் எனக்கு எதிராக பலரும் பரப்பி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அபிராமியும் , சாக்ஷியும் இணைந்து எனக்கு எதிரான பல கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர் என்று கூறியிருந்தார் மீரா மிதுன். இதனுடைய உச்ச கட்டத்தில் என்னை பொண்ணே கிடையாது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர் எனவும் மீராமிதுன் அந்த வீடியோ பதிவில் கூறியிருந்தார்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!