சீமானை குறி வைக்கும் மலேசிய போலீஸ்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!


விடுதலைப்புலிகளுடன் சீமான் தொடர்பு வைத்திருப்பது உறுதியானால் மலேசியா நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அரசியல்வாதிகளை அரசாங்கம் கைது செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலைப்புலிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். மேலும் அவர் அவ்வப்போது மலேசிய நாட்டிற்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து அரசியல் சம்பந்தமாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இது குறித்து மலேசிய நாட்டின் உயரிய காவல்துறை கமிஷனராக டத்துக் அயோப் கூறுகையில், தடைவிதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சீமானின் தொடர்பு எந்த அளவு இருந்துள்ளது என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து பார்ப்போம். மேலும் இயக்கத்திற்கு உதவி செய்தது, நிதி திரட்டிக் கொடுத்தது ஆகிய செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படும்.

குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை இணைந்தால் சீமான் மலேசிய நாட்டில் நுழைவதற்கு தடை விதிக்கக்கோரி குடிவரவு துறையினரிடம் கேட்டு கொள்வோம்” என்று அவர் கூறினார். இதேபோன்று நடவடிக்கைகள்தான் எடுக்கப்படும் என்று மலேசியா பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் புக்கிட் அமன்னும் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது நாம் தமிழர் கட்சியினர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!