தம்பி மகளிடம் அத்துமீறல்… 65 வயது முதியவரின் பாலியல் லீலைகள்..!


அரியலூர் மாவட்டத்தில் ஊள்ள அகரம் எனும் ஊரில் வசிக்கும் 65 வயது முதியவர் ஒருவர் தனது தம்பி மகளையே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள அகரம் எனும் பகுதியில் தனது மகனோடு வசித்து வருகிறார் அந்த பெண். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவரை பிரிந்து தனியாக தனது தந்தையின் ஊரில் வசித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் இவர் சற்று மனநலம் பிசகானவர் என சொல்லப்படுகிறது. சிறு சிறு வேலைகள் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தனது தந்தையின் அண்ணனும் தனது பெரியப்பாவுமான ஒருவரின் முந்திரி தோப்புக்கு சென்று முந்திரி கொட்டைகள் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த அவரது பெரியப்பா இவரை மிரட்டி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மந்தப்பட்ட நபர் மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!