குழந்தைங்கள இதற்கு ஊக்குவிக்கனுமாம்… பிரபல நடிகை சர்ச்சை பேச்சு!


குழந்தைகள் செக்ஸ் வைத்துக்கொள்வதை பார்த்து பெற்றோர் சந்தோஷப்பட வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிங்க்வில்லா செய்தி தளத்துக்கு பேட்டியளித்துள்ள கங்கனா உடலுறவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதாவது பெற்றோர் தங்களின் குழந்தைகள் செக்ஸ் வைத்து கொள்ள விரும்பினால் அதற்கு தடை போடாமல் குழந்தைகள் பொறுப்பான செக்ஸ் கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசியிருப்பதாவது, “உடலுறவு என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். நீங்கள் உடலுறவை விரும்பும் போது அதை வைத்துக் கொள்ளுங்கள். வெறித்தனமாக இருக்காதீர்கள்.

செக்ஸ் வேண்டுமென்றால் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி உங்களிடம் கூறப்பட்ட ஒரு காலம் இருந்தது, உங்கள் உணர்ச்சிகள் அந்த நபரை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது. வரலாற்றில் படையெடுப்புகளால் மக்கள் அந்த எண்ணத்தில் இருந்தனர். நம்முடைய வேதங்கள் உடலுறவை அனுமதிக்கவில்லை.

குழந்தைகள் உடலுறவு கொள்வதைப் பார்த்து பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குழந்தைகள் பொறுப்பான உடலுறவு கொள்ள வேண்டும். நான் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு என் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர்கள் குழந்தைகளை உடலுறவு கொள்ள ஊக்குவிக்க வேண்டும்,” இவ்வாறு நடிகை கங்கனா ரனாவத் தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

கங்கனாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் ஜட்ஜ்மென்டல் ஹை க்யா படத்தில் நடித்திருந்தார், இந்தப்படத்தில் ராஜ்கும்மர் ராவ், ஜிம்மி ஷெர்கில் மற்றும் அமிரா தஸ்தூர் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்தப்படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் கங்கனாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.-Source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!