பொதுப்பணித்துறை என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை – பாலக்காடு அருகே பரபரப்பு..!


கேரள மாநிலம் பாலக்காடு அருகே கொல்கத்தாவை சேர்ந்த பொதுப்பணித்துறை என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் மதுசூதனன் (வயது 48). இவர் கேரள மாநிலம் பாலக்காடு காஞ்சிராப்புழாவில் நீர்பாசன திட்ட நிர்வாக துணை என்ஜினீயராக பணியாற்றினார். அதே பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை மதுசூதனன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மன்னார்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மதுசூதனனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுசூதனன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!