இனி என்ன நடக்க போகுதோ..? சேரனை எச்சரித்த சொந்த மகள்..!


சேரனை அவரது மகள் எச்சரித்து விட்டு சென்றதால் இனி என்ன நடக்கும்? சேரன் என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ப்ரீஸ் டாஸ்கின் போது நேற்று சேரனின் அம்மா, தங்கை மற்றும் மகள் ஆகியோர் உள்ளே சென்றிருந்தனர்.

உள்ளே சென்ற மகள் லாஸ்லியாவிடம் பேசுவது தான் உங்க மைனஸ். உங்களுக்கு நானும் அக்காவும் தான் பொண்ணு. இனியும் லாஸ்லியா கிட்ட பேசினீங்க நான் உங்க கிட்ட பேச மாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் நீங்க அவங்கள விட்டு கொடுக்காம தான் பேசிட்டு இருக்கீங்க, ஆனால் அது உங்களை விட்டு கொடுத்து தானே பேசிட்டு இருக்கு எனவும் கூறியுள்ளார்.

தன்னுடைய மகளின் வாக்கிற்காக சேரன் லாஸ்லியாவிடம் இருந்து ஒதுங்கி கொள்வாரா? இல்லை பழைய படி ஒரு அப்பா போலவே நடந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!