பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று கவினை சந்திக்க வந்த அவரது, பளார் என கன்னத்தில் அறைந்தது ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியார்கள் அவர்களின் குடும்படுத்தினரை சந்திக்க பிக்பாஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள் செல்கின்றனர். இதுவரை முகென், லாஸ்லியா, சேரன், தர்ஷன், வனிதா ஆகியோரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சென்றுள்ளனர்.
அந்த வகையில் இன்று கவினுக்கு சப்போர்ட்டாக ஒருவர் வந்திருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது. கவினின் பெற்றோர் சீட்டுக்கம்பெனி நடத்தி மோசடி செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பது கவினின் நண்பர் என கூறப்படுகிறது. கவின் மற்றும் ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசினார். புறப்பட தயாரான அவர், ஒரு முக்கியமான கடமை பாக்கியிருக்கிறது என்றார்.
தொடர்ந்து, பிரீஸில் இருந்த கவினின் முன்பு சென்ற அவர்,நீ மட்டமா விளையாடுன கேமுக்கு, நீ இவ்வளவு மட்டமா பண்ண வேலைக்கு, உன்ன நம்புனவங்கள ஏமாத்துனதுக்கு ஒன்னு செய்யலாம் என்றிருக்கேன் என்றார்.
நீ டைட்டில் ஜெயிச்சிட்டு, பெரிய ஆளா ஆயிட்டன்னா, என்னை ஸ்டேஜ்ல அழைத்து அடிச்சுக்கோ என்று கூறி பளார் ஓங்கி அறைந்தார். இதனை கண்ட சக ஹவுஸ்மேட்ஸ் ஆவென வாயை திறந்து தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.-Source: filmibeat
#Day82 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/yLR0C8CTxF
— Vijay Television (@vijaytelevision) September 13, 2019
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!