‘டிக் டாக்’ பழக்கத்தில் தனியாக வரும்படி வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

கிருஷ்ணகிரி பாரதியார் நகரைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் செல்போனில் “டிக்-டாக்” செயலி மூலம் இவருக்கும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஜகானூரைச் சேர்ந்த நெசவு தொழிலாளி மோகன் (32) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் பழக்கம் ஏற்பட்டது. மோகன்குமார் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் மோகன் குமாரும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அந்த பெண்ணும் இடையேயான பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி செல்போனில் பேசும் அளவிற்கு வளர்ந்தது. இதனிடையே தங்களின் ஊரில் கோவில் உள்ளதாகவும், அங்கு வந்தால் குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று மோகன்குமார் அந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அவர் செல்லாததால் இளம்பெண்ணுக்கு மோகன்குமார் அடிக்கடி போனில் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மோகன்குமார், கிருஷ்ணகிரியில் உள்ள அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்து தன்னுடன் வருமாறு அழைத்து பாலியல் தொல்லை கொடுத் தார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோகன்குமார் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து இளம்பெண் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி வழக்குப்பதிவு செய்து, மோகன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.