கண், காது, மூக்கு வழியாக வந்த ரத்தம்… மார்பக அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!


சீனாவில் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் வீட்டிற்கு வந்த சற்று நேரத்தில் உயிரழந்த சம்பவம் அவரது கணவர், உறவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சீனாவில் யங் சூயி என்ற 28 வயது இளம் பெண் தன்னுடைய மார்பில் பாதிப்பு இருப்பதற்காகவோ அல்லது மாற்றம் செய்து கொள்வதற்காகவோ என்னவோ அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் யங் சூயிக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் மார்பக அறுவை சிகிச்சை செய்யவேண்டம் என கூறியுள்ளனர்.

அதற்கு சம்மதித்த யங் சூயி அறுவை சிகிச்சை விஷயத்தை தன்னுடைய கணவருக்கு கூட தெரிவிக்காமல் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டு மாலையில் வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் யங் சூயிக்கு காது, மூக்கு வழியாக ரத்தம் கொட்டத் தொடங்கியது.

பின்னர் சற்று நேரத்தில் யங் சூயி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் அவரது உடலில் பல இடங்களில் ஊசி குத்தப்பட்டதற்கான அடையாளம் இருந்ததையும் கவனித்தார்.

பின்னர் கணவர் போலிசாரிடம் புகார் அளிக்க அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் ஒரு போலி மருத்துவர்கள் உள்ள மருத்துவமனையில் யங் சூயி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு அங்கிருந்த போலி மருத்துவர்களை கைது செய்தனர்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!