15 வயது சிறுவனுக்கு 32 வயது பெண் செய்த கொடூரம்…!


15 வயது சிறுவனை ஒராண்டாக பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு எலிசபெத் சாண்செஸ் என்ற 32 வயதான பெண்மணி வசித்து வருகிறார். இவருடைய அத்தையின் பெயர் மரியா. மரியாவின் வயது 50. அமெரிக்கா நாட்டில் உள்ள குயின்ஸ் ஹோமில் வசித்து வந்த இவர் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையானது அப்போதிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மரியத்தின் 15 வயது மகன் 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இரு வழக்குகளையும் விசாரித்த காவல்துறையினருக்கு எலிசபெத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எலிசபெத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் மரியாவை கொன்றதையும், அவருடைய மகனுக்கு பாலியல் துன்புறுத்தல்களை அளித்து வந்ததையும் எலிசபெத் ஒப்பு கொண்டுள்ளார்.

வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு எலிசபெத்தை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிசபெத்திற்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!