வலைத்தளத்தில் கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி


சமூக வலைதளங்களில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு நடிகை சாக்‌ஷி அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.

காலா, விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்‌ஷி, சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் குறிப்பிட்டு, இதர பிக்பாஸ் போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் கிண்டல் செய்தனர்.


அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சாக்‌ஷி பதிவிட்டதாவது:- “எனது டுவிட், எனது உரிமை. அமைதியாகுங்கள். உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். இது ஒரு ஜனநாயக நாடு. எனக்குப் பேசும் உரிமை இருக்கிறது. நையாண்டி செய்பவர்களே என்னைப் பின் தொடர்வதை விட்டுவிட்டு வேறு ஏதாவது உபயோகமாக செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த ஆதர்சங்களுக்கு கோயில் கட்டுங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!