முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலையா..? கொலையா..?


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விபி சந்திரசேகர் மரணம் இயற்கையானது கிடையாது அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

தமிழகத்தை சேர்ந்தவரும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான விபி சந்திரசேகர் நேற்று காலமானார். கிரிக்கெட் தொடர்களுக்கு இவர் கடந்த சில மாதங்களாக வர்ணனை செய்து கொண்டு இருந்தார்.

தமிழக கிரிக்கெட் உலகில் இவர் பெரிதும் அறியப்பட்டவர். விபி சந்திரசேகர் உலக அளவிலும் கிரிக்கெட் உலகில் நிறைய நண்பர்களை கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1988 முதல் 1990வரை இவர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அதன்பின் தமிழக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். விபி சந்திரசேகருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவருக்கு தற்போது 57 வயதாகிறது.

இவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததாக செய்திகள் வந்தது. ஏற்கனவே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காலமானதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வருகிறது. மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டு மாடியில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வருகிறது. ஆனால் இவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விபி சந்திரசேகர் உடல் தற்போது பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பாக நிறைய சந்தேகங்கள் நிலவி வருவதால் மயிலாப்பூர் போலீசார் இதை விசாரித்து வருகிறார்கள். நேற்று மயிலாப்பூர் போலீசார் விபி சந்திரசேகர் வீட்டில் சோதனை செய்தனர். அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.-Source:oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!