கூட்டு பாலியல் பலாத்காரம்.. பிறந்த நாளில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.!


மும்பையைச் சேர்ந்த பெண்ணை, அவரது பிறந்தநாளன்று அடையாளம் தெரியாத 4 பேர் கற்பழித்துள்ளனர். இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த மாதம் 7ஆம் தேதி, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நண்பரின் வீட்டிலிருந்து 19 வயதுடைய பெண் ஒருவர் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார். செல்லும்போது வழியில், அப்பெண்ணுக்கு தெரியாத 4 பேர் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன்பின்னர், இந்த சம்பவம் குறித்து சில வாரங்களாக யாருக்கும் தெரிவிக்காமல் அந்த பெண் அழுதபடியே இருந்துள்ளார். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பின்னர் அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து காவல் ஆய்வாளர் தீபக் விஜய் கூறுகையில், ‘376(பலாத்காரம்) , 376டி (கூட்டு பாலியல் பலாத்காரம்) 34 (கிரிமினல் குற்றம்) உள்ளிட்ட தண்டனை பிரிவுகளின் கீழ் செம்பூர் பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத அந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து, இது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது’ என கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!