பிரபல டிவி சீரியல் அதிகாரி என்னிடம் நிர்வாண புகைப்படம் கேட்டார்.. நடிகை திவ்யா பகீர் பேட்டி..!


சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தபோது என் நிர்வாண புகைப்படம் ஒன்றை சீரியல் குழு அதிகாரி கேட்டார் என்று பிரபல தொகுப்பாளினி திவ்யா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

கேப்டன் டிவியில் ‘சமையல் மந்திரம்‘ நிகழ்ச்சி மூலம் இளைஞர்களிடம் பிரபலமானவர் நடிகை திவ்யா. மேலும் இவர் சின்னத்திரைத் தொடர்கள் வழியே மக்கள் மனங்களை கவர்ந்துள்ளார், தற்போது இவர் ‘வம்சம்‘, ‘மரகதவீணை’ போன்ற மெகா சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி திவ்யா தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து அளித்த பேட்டி ஒன்றில்… ‘‘சினிமாவில் இருக்கும் பெண்களுக்கும் நிறைய பிரச்சனைகள் வருகின்றன. சமீபகாலமாக நடிகைகள் பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைகள் அனுபவித்ததாக கூறிவருகின்றனர். அதில் நான் அப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிறகு எனக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது. ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.


அடுத்த நாள் நடிக்க போகும்போது, சீரியல் குழு அதிகாரி ஒருவர் இரவு என்னை அரைகுறை ஆடை புகைப்படம், ஆடையில்லா புகைப்படம் அனுப்புங்கள் என்று கேட்டார். அதிர்ச்சியடைந்த நான் அந்த நேரம் பயப்படாமல் அவரை எதிர்த்து கேள்விகள் கேட்டதால் அவர் இறுதியில் மன்னிப்பு கேட்டதாக கூறியுள்ளார்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!