புலியை தடியால் அடித்தே கொன்ற கிராம மக்கள்.. பதற வைக்கும் வீடியோ..!


உத்தர பிரதேசத்தில் விவசாய நிலத்தில் புகுந்த பெண் புலியை, கிராம மக்கள் தடியால் அடுத்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், பில்பித் மாவட்டத்தில், டியுரியா பகுதியில், காட்டிலிருந்து விவசாய நிலத்திற்குள் புகுந்த பெண் புலியை ஊர் மக்கள் தடியால் அடித்தே கொன்றனர். இந்த பதைபதைக்கவைக்கும் சம்பவத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவைக் குறித்து பலர், மனித தன்மையற்ற செயல் என்றும், அப்பாவி விலங்கினை அடித்தே கொல்வதை ஒரு போதும் ஏற்கமுடியாது எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!