பெற்ற குழந்தை என்றும் பாராமல் 4வது மாடியில் இருந்து வீசி கொன்ற தாய்..!


உத்தரபிரதேசம் மாநிலத்தில் 4வது மாடியில் இருந்து 3 மாத குழந்தையை வீசிவிட்டு, காணவில்லை என நாடகமாடிய தாய் போலீசாரிடம் சிக்கினார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று 3 மாதங்களுக்கு முன்பு பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கல்லீரல் பாதிக்கப்பட்டதாகவும், தொடர் சிகிச்சை அளித்தாலும் பலனில்லை எனவும் கூறியுள்ளனர்.

குழந்தை பலி

இதனால் தாய், மகன் இருவரும் அங்கேயே இருந்துள்ளனர். பின்னர் குழந்தையை காணவில்லை என கூறி, அந்த தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரிக்க மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை சோதனை செய்தனர்.

அப்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக, புகார் கொடுத்த தாயே அந்த குழந்தையை 4வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரது கணவர் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார், தாயை கைது செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!