ஓய்வுதான் சரியான முடிவு: பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா தோனி?

தோனி ஓய்வு குறித்து தினம் தினம் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று தோனியின் சிறுவயது கோச் கேசவ் பானர்ஜி, தோனியின் பெற்றோர் அவர் ஓய்வு பெற வேண்டும் என விரும்புவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

தோனியின் பெற்றோரை சந்தித்த பின் கேசவ் பானர்ஜி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து வர கூறியதாவது, தோனியின் பெற்றோரிடம் பேசினேன் அவர்கள். அனைத்து ஊடகங்களும் தோனி ஓய்வு பெற வேண்டுமெனக் கூறி வருகின்றன. நாங்களும் அவர்கள் கூறுவது சரியென்றே நினைக்கிறோம். எங்களால் இவ்வளவு பெரிய சொத்தைப் பராமரிக்க முடியவில்லை என கூறியதாக தெரிவித்தார்.

இதற்கு அவர் இத்தனை ஆண்டுகளாக இதையெல்லாம் பராமரித்து வந்துவீட்டீர்கள். உங்களால் இன்னும் ஒரு வருடம் இதைச் செய்ய முடியும் என அவர்களிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.- Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.