கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு விசித்திர தண்டனை – அதிர்ச்சி வீடியோ…!!


மத்தியபிரதேச மாநிலம் ஜாபுவா மலைவாழ் மாவட்டத்தில் உள்ள கேதி கிராமத்தை சேர்ந்த 32 வயது பிகில் மலைவாழ் இன பெண்ணுக்கு அதே ஊரை சேர்ந்த வேறு வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த தகவல் அப்பெண்ணின் கணவரின் குடும்பத்துக்கு தெரியவந்தது.

இதனால் பயந்துபோன கள்ளக்காதல் ஜோடி கடந்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தது. இருந்தும் கணவர் குடும்பத்தினர் அவர்களை தேடி கண்டுபிடித்து கிராமத்துக்கு அழைத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி பஞ்சாயத்து கூடியது. அதில் கள்ளக்காதலனுடன் ஓடிய மலைவாழ் பெண்ணுக்கு கடுமையான நூதன தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் தனது கணவரை 2 கி.மீட்டர் தூரம் தூக்கி சுமக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அப்பெண் தனது கணவரை தோளில் தூக்கி சுமந்து சென்றார்.

அத்துடன் அவரை விடவில்லை. தூக்கி சுமந்த அவரை கணவர் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அடித்து உதைத்தபடியே உடன் சென்றனர். இதனால் வேதனையில் துடித்தபடி ரத்த காயங்களுடன் கணவரை தூக்கி சுமந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பிடோல் போலீஸ்நிலையத்தில் அப்பெண் புகார் செய்தார்.

அதையடுத்து கணவர், மாமனார், கொழுந்தனார் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இத்தகவலை ஜாபுவா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்சுந்தரி ஜெயின் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!