தர்காவில் தலைவிரி கோலத்தில் நிர்மலா தேவி! தூக்கி சென்ற போலீஸ்..!


கல்லூரி பெண்களை தவறான முறையில் வழிநடத்தி சென்ற குற்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள நிர்மலாதேவி தர்கா ஒன்றில் தலைவிரித்தாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற ஆண்டு நிர்மலா தேவி தமிழகத்தில் தவறான விஷயங்களுக்காக டிரெண்டிங்காக இருந்தவர். கல்லூரி மாணவிகளை சமூகத்தில் இருந்த செல்வாக்கு மிக்க நபர்களுக்கு இரையாக்கினார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் விடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆளுநர் முதல் அமைச்சர் வரை சிக்கினர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவரைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியாயின. யாரும் எதிர்பாராவிதமாக இவர் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் தர்கா ஒன்றிக்கு சென்று செய்த ரகளை சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தர்காவானது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது.

அங்கு குழந்தைகளே மந்திரிக்கும் இடத்திற்கு சென்ற அவர், தன் தலையை விரித்து தனக்கு தானே பேசிக்கொண்டு புலம்பிக் கொண்டிருந்தார். மசூதி நிர்வாகத்தினர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் நிர்மலா தேவியை வெளியே செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். அடம்பிடித்த அவர் அங்கேயே அமர்ந்தார். காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இந்த சம்பவமானது விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!