செக்ஸியாக நடிக்க மாட்டியா..? ஜாங்கிரி – வனிதா சண்டையால் நாறிய பிக்பாஸ் வீடு!


பிக்பாஸ் வீட்டின் அகம் டிவியில், கமல் நிகழ்ச்சியின் துவக்கதிலேயே வீட்டின் தற்போதைய நிலையை செய்தி வாசிப்பாக வழங்கும் டாஸ்க்கைக் கொடுத்தார்.

முதலில் செய்தி வாசித்த பாத்திமா பாபு, தனக்கான பிரத்யேக பானியில் கொஞ்சுத் தமிழில் ஆரம்பிக்க, ஒருக்கட்டத்தில் நியூஸ் சூடு பிடித்தது. வீட்டில் மைக் முகைன் கொடுத்த ஒருப்பாட்டிலை குழந்தையாக பாவித்து நாள் முழுவதுமாக அபிராமியின் அட்ராசிட்டியை அம்பலப்படுத்த, பாலிசாக பேசி பாத்திமா பாபு சமாளிக்க சமாளிக்க நினைக்க , மது தமிழ்ப்பெண் கலாச்சாரம் என வாயை விட்டார்.

இதனால்க் கொதித்து எழுந்த அபி தமிழ் கலாச்சாரத்துடன் இதை ஒப்பிட தேவையில்லை அதிலும் நானும் தமிழ்பெண் தான், எனக்கும் அச்சம், மடம், ஞானம் எல்லாம் உண்டு கமலிடம் பஞ்சாயத்தை கிளப்ப, நல்ல வேலையாக நான் தமிழ்ப் பெண் இல்லை என கமல் கவுண்டர்க் கொடுத்தார்.
இதற்க்கிடையில் மதுமிதா, வனிதா, அபி, ஷெரின் என ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு வீடே நாறியதில், வெளியில் பார்த்துக்கொண்டிருந்த ஆடியன்ஸ் மத்தியில் கமல், கேமரா இருப்பதையும் இவர்கள் மறக்க துவங்கியதாக கூறியவர், எப்படி விட்டுட்டு வந்த இப்படி பண்ணி வச்சிரூக்கீங்களேன்னு, நேசமணி பாணியில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

மேலும் அதன் நீட்சியாக வனிதா, மதுவிடம் நீ நடிக்கும் படத்தில் செக்ஸியாக நடிக்க கூறினால் ஒத்துக்க மாட்டியா என கேட்க, மது நடிப்பேன் ஆனால் ,ஆனால் அது தவறில்லை ஏ செர்டிப்பிக்கேட் கொடுப்பார்கள் என பதில் அளித்தவர், இந்த நிகழ்ச்சியை தனது குடும்பத்தில் எல்லோரும் பார்ப்பதால் , நான் தமிழ்ப்பெண் எனக்கென்று கலாச்சாரம் உள்ளது என புதுப் பஞ்சாயத்தைக் கூட்டினார்.-Source: times tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!