என் கணவர் ஒரு சைக்கோ.. பிக்காஸ் வீட்டில் கதறி கதறி அழுத மீரா மிதுன்


எனக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. என் கணவர் ஒரு சைக்கோ என்று பிக் பாஸ் போட்டியாளர் மீரா மிதுன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 சில நாட்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பரிட்சயமான பல போட்டியாளர்களுக்கு மத்தியில் 16 ஆவது போட்டியாளராக மாடல் மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக வந்தார். அதற்கு சில தினங்களுக்கு முன்பாக அழகி போட்டி நடத்துவதாகக் கூறி பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா என்ற பட்டம் பறிக்கப்பட்டது.

மேலும் தனக்கு சிலர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் மீரா மிதுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மீரா மிதுனை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி நிகழ்ச்சியின் டிஆர்பியை உயர்த்த திட்டமிட்டுள்ளது பிக் பாஸ் குழு.


இந்நிலையில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் தங்கள் சோக கதையை கூறி வர மீரா மிதுனின் சோக கதை மட்டும் ஒளிபரப்பாகவில்லை. ஆனால் உண்மையில் மீராவும் தனது கதையை கூறியுள்ளார். அதில், ‘5 வருடத்திற்கு முன்பு என்னுடைய அப்பா எனக்கு ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவர் ஒரு சைக்கோ. திருமணமான கொஞ்சம் நாட்களிலேயே அவர் என்னை விட்டு சென்றுவிட்டார்.

என் அப்பா என்னை நினைத்து மிகவும் வேதனைப்பட்டார். அந்த திருமணம் பதிவு செய்யப்படாததால் எனக்கு அப்பா வேறு திருமணம் செய்து வைப்பதாகக் கூறினார். நான் வேண்டாம் அவருக்காக காத்திருக்கிறேன் என்றேன். ஒருமுறை என் பிறந்தநாளன்று அவரை நானே சந்தித்து பேசினேன். ஆனால் அவர் என்னை அடித்து விட்டார். என் வாயிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. நான் உடனே வீட்டிற்கு வந்துவிட்டேன். என் திருமணம் பற்றிய நிறைய கனவுகள் இருந்தது. ஆனால் இப்படி ஆகிவிட்டது’ என்று கதறி அழுதார் மீரா மிதுன். மீராவின் கதையை கேட்ட வனிதா விஜயகுமார் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!