உலக கோப்பையில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகினார். இது குறித்து உருக்கமான பதிவை சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஷிகர் தவான் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து தவானுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில், ‘அன்பிற்குரிய தவான், ஆடுகளம்தான் உங்களை மிஸ் செய்ய இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
விரைவில் நீங்கள் குணம் அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் நீங்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்பி, இந்தியாவின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும்’ என பதிவிட்டார்.
Feel for you Shikhar. You were playing well & to be injured in the middle of such an important tournament is heartbreaking. I’m sure you’ll come back stronger than ever.
Rishabh you’ve been playing well & there can’t be a bigger platform to express yourself. Good luck! pic.twitter.com/T7qzKcDfoO— Sachin Tendulkar (@sachin_rt) June 20, 2019
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் உருக்கமான பதிவினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் சச்சின் கூறுகையில், ‘ஷிகர், நான் உங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். முக்கியமான சமயத்தில் உங்களுக்கு ஏற்பட்ட காயம் என் இதயத்தை நொறுக்கிவிட்டது.
நீங்கள் நிச்சயம் மீண்டு வருவீர்கள். உங்கள் திறமையை நிரூபிக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்’ என உருக்கமாக கூறியுள்ளார்.-Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!