காதலில் வென்று கல்யாணம் செய்த நபர் வெட்டிக் கொலை! மதுரையில் பரபரப்பு..!


மதுரை தல்லாகுளம் அருகே காவல் நிலையத்தின் அருகே இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் செல்லூர் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த அஜித் என்பவர் மீது உள்ள வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக தனது சகோதரர் ரஞ்சித்துடன் இருசக்கர வாகனத்தில் காவல்நிலையம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று வண்டியிலிருந்து இருவரையும் கீழே தள்ளி அவரது சகோதரர் ரஞ்சித்தை விடுத்து அஜித்தை துரத்தி சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இந்நிலையில்பலத்த காயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை செய்யப்பட்ட அஜித் என்பவரின் மீது கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அவர் வசித்து வந்த பகுதியில் விசாரணை நடத்திய போது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் அஜித் என்பவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அஜித் அந்த பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டு உள்ளதாகவும் இதனால் ஆத்திரத்தில் விக்னேஷ் கூலிப்படையை ஏவி அஜித்தை கொலை செய்திருக்கலாம் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் அஜித் முன்விரோதம் காரணமாக வேறு யாரேனும் கூலிப்படையை ஏவி கொலை செய்தனரா? அல்லது காதல் விவகாரம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!