இரவு தோட்டத்தில் தங்கிய கணவன் மனைவி மரணம்… நடந்தது என்ன?


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியை சேர்ந்தவர் தனிக்கொடி (வயது 55). இவர் திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மணிமேகலை (53).

தனிக்கொடிக்கு கூடக் கோவில் அருகே உள்ள நெடுங்குளம் சாலையில் சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு அவர் விவசாயம் செய்து வந்தார்.


இந்தநிலையில் நேற்று இரவு தனிக்கொடி மனைவி மணிமேகலையுடன் தோட்டத்தில் உள்ள செட்டில் தங்கினார். தோட்டத்தில் மின்மோட்டருக்கு சென்ற மின்வயர் அறுந்து கிடந்ததாக தெரிகிறது.

இதனை கவனிக்காமல் தனிக்கொடி மிதித்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிமேகலை கணவரை காப்பாற்ற சென்றார். இதில் 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!