மும்பையில் கிரிக்கெட் வீரர் ஒருவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை..!


மும்பை பாண்டூப் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் பன்வார். கிரிக்கெட் வீரரான இவர், சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்தார். நேற்று இரவு தனது தோழியுடன் பாண்டூப் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ராகேஷ் பன்வாரை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து ராகேஷ் பன்வாரின் நண்பர் கோவிந்த் ரத்தோர் கூறுவையில், ராகேஷ் பன்வாருக்கும், அவர் வசிக்கும் பகுதியில் இருந்த கான் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் அவர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் ராகேஷ் பன்வார் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!