பிரபல தயாரிப்பாளரின் இறுதி சடங்கிற்கு செல்லாத முன்னணி நடிகர்கள்…!


வீரம் படத்தின் தயாரிப்பாளர் இறுதி சடங்கிற்கு ஒரு நடிகர் கூட சென்று நேரில் அஞ்சலி செலுத்தாதது அதிர்ச்சியை அளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவரது மரணத்திற்கு அவரது தயாரிப்பில் நடித்த பிரபல நடிகர்களான அஜித், விஷால் உள்பட ஒரு நடிகர் கூட நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் வெள்ளியன்று பிற்பகல் விஜயா வாகினி புரோடக்‌ஷன்ஸ் பி நாகிரெட்டி அவர்களது இளைய மகன் திரைப்பட தயாரிப்பாளர் பி வெங்கட்ராம ரெட்டி (75) இயற்கை எய்தினார். அவரது மனைவி பி பாரதிரெட்டி. இவருக்கு ராஜேஷ்ரெட்டி என்ற ஒரு மகன் மற்றும் ஆராதனா ரெட்டி மற்றும் அர்ச்சனா ரெட்டி என்று இரு மகள்கள் இருக்கின்றனர்.

வெங்கட்ராம ரெட்டிக்கு விஷாலின் தாமிரபரணி, தனுஷின் படிக்காதவன் மற்றும் வேங்கை, அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் பைரவா ஆகிய 5 படங்களை அவர் தயாரித்துள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சங்கத் தமிழன் படத்தை தயாரித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று இயற்கை எய்திய வெங்கட்ராம ரெட்டியின் உடல் மறுநாள் சனிக்கிழமையன்று நெசப்பாக்கத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில், ஒரு சில துணை நடிகர், நடிகைகளைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வளவு ஏன், தயாரிப்பாளரின் அருகிலுள்ள தெருவில் அலுவலகம் வைத்திருக்கும் விஷால் கூட செல்லவில்லை என்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை அளிக்கிறது.

இது கூட விடுங்க, தனது படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் இறுதி அஞ்சலிக்கு தனது ஆபிஸ் பாய் ஒருவரை அனுப்பி அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது. என்னதான் மாஸ் ஹீரோக்களின் படங்களை தயாரித்திருந்தாலும், வெங்கட்ராம ரெட்டியின் மறைவு மற்றும் இறுதிச் சடங்கை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பு செய்யவில்லை. இதனால், தான் எந்த ஹீரோவும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஒருபுறம் அஜித் தனது ஆபிஸ் பாயை அனுப்பி வைத்துள்ளது ஓரளவிற்கு ஆறுதல் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!