காதில் வலை கட்டி வரும் சிலந்தி.. டாக்டர்கள் அதிர்ச்சி.. சீனாவில் விசித்திரம்..!


மனிதனின் காதில் சிலந்தி ஒன்று வலை கட்டி வரும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன நாட்டை சேர்ந்தவர் லீ. அவருக்கு வலது காதில் ஏதோ ஊர்வது போன்றும் அரிப்பது போன்றும் இருந்துள்ளது. இதையடுத்து அவர் யாங்ஷோவில் உள்ள மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணரை சந்தித்தார்.

அப்போது காதை சோதனை செய்தனர். ஆனால் மருத்துவர்களால் ஒன்றும் கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து மைக்ராஸ்கோப் கருவி மூலம் மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
காரணம், அவரது காதில் சாம்பல் நிற சிலந்தி ஒன்று உயிருடன் இருந்தது. அதுவும் வலை கட்டி வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து அவரது காதில் இருந்த சிலந்தி அகற்றப்பட்டது. லீக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!