குடித்துவிட்டு காரை ஓட்டிய நபரால் கோர விபத்து.. மூதாட்டி உள்பட 2 பேர் பலி..!


சென்னை வில்லிவாக்கத்தில் குடி போதையில் கார் ஓட்டிய நபர், சாலை ஓரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். கார் மோதியதில் மூதாட்டி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பி ஓட முயற்சி செய்தார். இதனையடுத்து பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!