“இலங்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி டுவீட்”

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவ செய்தி தனக்கு அதிர்ச்சியளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

கொழும்பில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 101 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில், இலங்கையில் இருந்து வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது,

இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என்னுடைய பிரார்த்தனைகள், இலங்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.- Source: lankasri


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.