23 வயது இளைஞனுடன் தகாத உறவு வைத்திருந்த 40 வயது பெண் – பிறகு நேர்ந்த கொடூரம்!


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் அவரது மகன் சரவணன் 23 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். பின்பு அதே பகுதியைச் சேர்ந்த பாரதி 38 இருவருக்குமிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பாரதிக்கு திருமணம் ஆன நிலையில் ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். அவரது கணவர் அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சரவணன் மற்றும் பாரதி ஒரே தெருவைச் சேர்ந்தவர் என்பதால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளதாக தெரிகிறது முதலில் நட்பாக தொடங்கிய இவர்களது உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது இதனைக் கண்டித்த பாரதியின் கணவர் சரவணனிடம் பேசுவதை நிறுத்திக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார். பின்னர் பாரதியின் உறவினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து இருவரும் ஊரை விட்டு வெளியேற திட்டமிட்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து தங்கி வந்துள்ளனர் .இதை தொடர்ந்து அவர்கள் அங்கு இருப்பதை அறிந்த பாரதியின் கணவர் மற்றும் உறவினர்கள் அவர்களது வீட்டுக்குச் சென்று பாரதியை சரவணனை விட்டு தனியே வரும்படி கூறியுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் இதோ சிறிது நேரத்தில் வருகிறோம் என வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டனர் சிறிது நேரம் கழித்து இருவரும் அங்கு வைத்திருந்த மண்ணெண்ணெயை தங்களது மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறவினர்கள் அவர்களை காப்பாற்ற சென்ற போது இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனே உறவினர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர் அதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!