கேப்டனிற்கு ஓய்வு தந்தால் அவரது குடும்பத்திற்கு நன்றி தெரிவிப்பேன் – நடிகர் ஆனந்தராஜ்


தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ஓய்வு தந்தால் அவரது குடும்பத்திற்கு நன்றி தெரிவிப்பேன் என்று நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆனந்தராஜ் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கூட்டணி என்ற பெயரில் அதிமுகவின் வாக்கு வங்கி பிற கட்சிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலை, நீட் விலக்கு தொடர்பாக மோடி, ராகுலிடம் அதிமுக, திமுக வாக்குறுதி பெற வேண்டும்.

விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் கட்சித்தலைமையை பிரேமலதா எடுத்துக்கொள்ளலாம். விஜயகாந்திற்கு ஓய்வு தந்தால் அவரது குடும்பத்திற்கு நன்றி தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!