தொழில் நஷ்ட்டத்தால் குடும்பத் தலைவன் செய்த கொடூர செயல்… அயலவர்கள் பேரதிர்ச்சியில்…!


சென்னை பல்லாவரம் பம்மலில் தொழில் நஷ்டம் காரணமாக தாய், மனைவி, இரண்டு குழந்தைகள் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.

சென்னை பல்லாவரம் பம்மல் பகுதியில் உள்ள திருவள்ளூர்நகர் ரங்கநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாமோதரன். இவரது தாய் சரஸ்வதி, மனைவி தீபா, மகன் ரோஷன், மகள் மீனாட்சி.


தாமோதரன் நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்ள தீர்மானித்தார். இதனால் தனது தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.

பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். மற்ற நான்குபேரும் கொலை செய்யப்பட்ட நிலையில் தாமோதரம் உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு தாமோதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தில் உள்ள நான்கு பேரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!