கொடநாடு கொலை வழக்கு.. அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட ரங்கராஜ் பாண்டே..!


பிரபல பத்திரிகையாளர் பாண்டே தனது சாணக்யா டிஜிட்டல் தொலைக்காட்சியின் மூலம் நேற்று கொடநாடு குறித்த, வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் ட்ரெண்டிங்கில் இருந்தது.

அந்த விடீயோவின் மூலம் வேண்டுமென்றே, கொடநாடு கொலைவழக்கில் தொடர்புடையவர்களை, முதலமைச்சர் பழனிசாமி பெயரை இந்த விவகாரத்தில் இழுத்துவிட வேண்டுமென்று இடைத்தரகர் ஒருவர் பேசி இருந்தது தெரியவந்தது.

பாண்டே வெளியிட்ட வீடியோ பதிவு உண்மை இல்லை என்றும் பல்வேறு பகுதிகளில் வெட்டி ஒட்டப்பட்டது என்றும் திமுகவினர் உட்பட பலரும் குற்றம் சுமத்தினர், மேலும் அவர்கள் பேசுவதை வேறுமாதிரியாக மொழிபெயர்த்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில் சந்தேகத்திற்கு இடமளிக்காத வண்ணம் மற்றொரு விடியோவை வெளியிட்டுருக்கிறார் பாண்டே., அந்த வீடியோவில் எந்த வித எடிட்டிங்கும் இல்லாமல் 19 நிமிடம் வெளியாகி இருக்கிறது.

இதன் மூலம் திமுக குறித்த பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வர உள்ளது. தேர்தல் நேரத்தில் தங்கள் முகத்திரை கிழிந்துவிட்டதால் சமாளிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர் அக்கட்சியினர்.

பாண்டே வெளியிட்ட வீடியோ இங்கே இடம்பெற்றுள்ளது.-Source: tnnews24

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!