படுக்கைக்கு அழைக்கிறார்! லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு புகார்!


தன்னை விட 10 வயது இளைஞராக இருந்தாலும் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மீட்டு புகார் உச்சத்தில் இருந்த சமயம் அது. அப்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டது மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்தும் பெரும்பாலான ஊடகங்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. காரணம் லட்சுமி ராமகிருஷ்ணன் புகார் கூறியது பிரபல பிஆர்ஓ நிகில் முருகன் மீது.

நிகில் முருகன் தமிழ் திரையுலகில் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவர். நடிகர்கள் ரஜினி கமல் முதல் தற்போது திரைக்கு வரும் அனைவரும் கூட நிகில் முருகன் உடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள்.

காரணம் பிரபல இயக்குனர்கள் பல தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் நடிகர் நடிகைகளை தேர்வு செய்து கொடுப்பதில் நிகில் முருகன் முக்கியமான நபர். மேலும் செய்தித்தாள்கள் ஆக இருந்தாலும் சரி தொலைக்காட்சிகள் ஆக இருந்தாலும் சரி அங்கு அதிகாரத்தில் இருக்கும் அனைவரும் நிகில் முருகனுக்கு நெருக்கமானவர்கள்.

இதனால்தான் லட்சுமி ராமகிருஷ்ணன் நிகில் முருகன் மீது அப்போது அளித்த பரபரப்பு பாலியல் புகார் வெளிச்சத்திற்கு வரவில்லை. அப்படி என்னதான் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார் என்கிறீர்களா?

பிரபல பிஆர்ஓ நிகில் முருகன் தன்னுடன் எப்போதுமே இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசுவார் என்றும் தன்னை படுக்கைக்கு அழைக்கும் வகையிலேயே அவரது பேச்சு இருக்கும் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் அப்போது கூறியிருந்தார். நிகில் முருகன் தன்னிடம் அப்படி பேசும் போது உள்ளுக்குள் தனக்கு கோபம் வந்தாலும் வெளிப்படுத்தினால் சினிமாவில் நீடிக்க முடியாது என்று தெரிந்து சிரித்த முகத்துடன் அவரிடமிருந்து விடை பெற்றுச் செல்வதை வழக்கமாக்கி இருந்ததாக லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருந்தார்.

நிகில் முருகன் படுக்கைக்கு அழைக்கும் தான் சொல்லாத காரணத்தினால் தான் விருது வழங்கும் விழாக்கள் பல்வேறு திரை வாய்ப்புகள் கிடைக்காமல் போனது என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர் புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்து அடுத்த சில மணிநேரங்களில் லட்சுமி ராமகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றுவிட்டார் நிகில் முருகன்.

தான் நடந்து கொண்ட முறைக்கு வருத்தம் தெரிவித்ததுடன் இனி அப்படி செய்ய போவதில்லை என்று நிகில் முருகன் தன்னிடம் கூறியதாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் அப்போதே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!