கராத்தே பயிற்சி முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம்…!


மத்திய பிரதேச மாநிலத்தில் கராத்தே பயிற்சியாளர் மாணவியை கற்பழித்தும், ரகசியமாக ஆபாச படம் எடுத்து மிரட்டிய சமபவமும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிக்னோர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புற்றுநோய் பாதித்த சிறுமி கடைக்கு சென்றபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கற்பழித்தனர்.

பின்னர் மற்றொரு வாலிபரும் உதவி செய்வதாக கூறி கடத்திச் சென்று கற்பழித்தார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மாணவியை கராத்தே பயிற்சியாளர் கற்பழித்த கொடுமை நடந்துள்ளது.

இங்குள்ள ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த யூசுப் மன்சூரி (வயது 36) என்பவர் கராத்தே பயிற்சியாளர் ஆவார். இவரிடம் 20 வயது மாணவி கராத்தே பயிற்சி பெற்று வந்தார்.


கல்லூரிக்கும் வந்து கராத்தே பயிற்சி அளிப்பார். சம்பவத்தன்று கராத்தே பயிற்சி முடிந்து மாணவி உடை மாற்றும் அறைக்கு சென்றபோது அங்கு வைத்து அவரை மன்சூரி கட்டாயப்படுத்தி கற்பழித்தார்.

அப்போது அவரது நண்பரும் மற்றொரு பயிற்சியாளருமான நீலேஷ் சென் (42) என்பவர் ரகசியமாக வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை காட்டி மிரட்டி அவரும் மாணவியை கற்பழிக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக கராத்தே பயிற்சியாளர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியானா மாநிலம் ஹிகார் மாவட்டம் லக்னோ பகுதியில் நேற்று சகோதரியுடன் தூங்கிக் கொண்டு இருந்த 6 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் தூக்கிச்சென்று கொடூரமாக கற்பழித்தார். பின்னர் சிறுமியை கொலை செய்து தப்பி ஓடிவிட்டார்.

மறுநாள் சிறுமி பிணத்தை போலீசார் கண்டு பிடித்தனர். இந்த கொடூர சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பொங்கி எழுந்து கண்டன ஊர்வலம் நடத்தினார்கள். கொலையாளியை உடனே தேடிப்பிடித்து கைது செய்யக் கோரி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இதேபோல் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 1 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!