ஒக்கி புயலின் கோரத்தாண்டவத்தால்.. அழுகிய நிலையில் மிதக்கும் தமிழக மீனவர்களின் உடல்கள்..!


தொட முடியாத அழுகிய நிலையில் கடலில் மிதக்கும் எண்ணிலடங்கா தமிழக மீனவர் உடல்கள் : அதிர்ச்சியில் மீட்பு பணி குழு!

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு மாயமான மீனவர்களில் பலர் உயிரிழந்து அவர்களது உடல்கள் நடுக் கடலில் மிதப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

தென்மாவட்டங்களை புரட்டிப் போட்ட இந்த ஒக்கி புயலின் கோரத்தாண்டவத்தால் குமரி மாவட்டம் சொல்லமுடியாத கடும் துயரங்களைச் சந்தித்து வருகிறது.

மேலும் இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலில் மாயமாகி உள்ளனர்.


தற்போது இவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான 12 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

கடற்படைக்கு ஆதரவாக மீனவர்களும் கூட தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகே 50 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடலில் ஏராளமான உடல்கள் இறந்த நிலையில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்து எட்டு நாட்கள் ஆகி இருப்பதால் உடல்கள் சிதைந்து கரைக்கு கூட கொண்டு வர முடியாத நிலையில் இருப்பதாக மீட்பு பணிக்குச் சென்ற மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!