தேமுதிக அதிமுகவுக்கு ஒரு தலைவலி… பற்றவைத்த சு.சுவாமி… கொதிப்பில் பிரேமலதா..!


அதிமுகவுக்கு தேமுதிக ஒரு தலைவலி என பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக நீண்ட இழுபறிக்கு பின் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதற்காக அக்கட்சிக்கு அதிமுக நான்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தேமுதிக கட்சி அதிமுகவுக்கு ஒரு தலைவலி. பாஜகவுக்கு வெறும் ஐந்து தொகுதிகள்தானே ஒதுக்கியிருக்கிறார்கள். இதை நான் எப்படி மதிப்பது? என்றார்.

அதிமுக கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டுவருவதற்கு பாஜக தலைமை தீவிரமாக முயற்சிசெய்தது யாவரும் அறிந்ததே. ஆனால் தேமுதிகவை தற்போது பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி தலைவலி என கூறியிருப்பது தேமுதிக தொண்டர்களிடையே கொதிப்படைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!