அரசியல் வருகை பற்றி நடிகை வரலட்சுமி அதிரடி பேட்டி..!


நன்றாக கத்துக்கிட்டு சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று விஜயகாந்த்தை சந்தித்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறுகையில், ‘விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு, அரசியல் சூழல் பற்றி பேசினேன்.

இன்னும் யாரிடமும் கூட்டணி பற்றி பேசவில்லை. நல்ல கட்சி தான் நாடாள வேண்டும்.’ என்றார்.

இந்நிலையில் மகளிருக்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார் கூறுகையில்,‘ நமக்கு நாம் தான் பாதுகாப்பு. பெண்களுக்கு தற்காப்பு மிக அவசியமானது. சமூக வலைதளங்களை முறையான வழிகளில் பயன்படுத்த வேண்டும்.

சரத்குமார் அரசியலுக்கும் தனக்கு சம்மந்தம் இல்லை. அரசியலை நன்றாக கற்றுக்கொண்டுவிட்டு, பின் சரியான நேரத்தில் வருவேன்,’ என்றார்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!