பாகிஸ்தான் மீண்டும் வெறியாட்டம் – 9 மாத குழந்தை உள்பட 3 பேர் சுட்டுக்கொலை..!


காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். #PakistanAttacksKashmir

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதனையடுத்து பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை , பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியது.


இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எல்லைப்பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளையும், குடியிருப்புகளையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக காஷ்மீரின் எல்லையோரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணா காதி பகுதியில் நேற்றிரவு பாகிஸ்தான் படை வீரர்கள் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!