சிங்கப்பூர் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல் – பயணிகள் அதிர்ச்சி..!


சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பிராட்லி பெத்தான் என்பவர் பயணம் செய்தார்.

விமானத்தில் அவருக்கு உணவு வழங்கப்பட்டது. அவர் சாப்பிட்டபோது, கல்போன்று ஏதோ பொருள் வாயில் கடிப்பட்டது. அதை எடுத்து பார்த்தபோது, அது மனித பல் என தெரியவந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பிராட்லி பெத்தான், விமான ஊழியர்களிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, தங்களது தவறை ஒப்புக்கொண்ட விமான நிறுவனம் அதற்காக பிராட்லி பெத்தானிடம் மன்னிப்பு கோரியது. மேலும் அவருக்கு இழப்பீடாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 75 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5 ஆயிரம்) மதிப்பிலான இலவச கூப்பனை வழங்கியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!