இப்படியும் ஒரு கேடுகெட்ட மாமனாரா..? மருமகளுக்கு அரங்கேறிய பயங்கரம்!


மருமகள் மீது மாமனார் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த நிலையில் 60 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

படித்தவர்கள் நிறைந்த மாநிலம் மற்றும் கடவுலின் நிலம் என்று கூறப்படும் கேரள மாநிலத்தில் நிகழும் காட்டுமிராண்டித் தனங்களுக்கு சான்றாக இந்தச் சம்பவமும் அமைந்துள்ளது. தனது 23 வயது மருமகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்த 58 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இது வரதட்சிணை தொடர்புடைய விவகாரமாக இருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பேயர் கோபாலன் எனத் தெரியவந்துள்ளது. கருக்கச்சல் நகரின் உடும்பி என்ற இடத்தைச் சேர்ந்த இந்த நபர் தனது 30 வயது மகனை அந்தப் பெண் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்தது முதல் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு இடையூறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களின் திருமணம் காதல் திருமணம் என்றாலும், அவர்கள் கணவனின் தாய் – தந்தையுடனேயே வசித்து வந்தனர். காலப் போக்கில் பிணக்குகள் சரியாகிவிடும் என அவர்கள் போட்ட கணக்கு தப்புக் கணக்கானது. நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்த அந்தப் பெண் கடந்த மாதம் 9-ஆம் தேதி பணி முடித்து வீடு திரும்பியபோது மாமனார் கோபாலன் திடீரென அந்தப் பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் அந்தப் பெண் மீது ஊற்றி நெருப்பை பற்ற வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இத்னால் அலறித் துடித்த அந்தப் பெண்ணை கணவனும், மாமியாரும் உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்ததோடு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 60 சதவீத தீக்காயங்களுடன் அந்தப் பெண்ணுக்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் 2 வாரங்களுக்குப் பின் கடந்த திங்கட்கிழமை கோபாலனை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் செங்கணாச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்துக்கு வரதட்சிணை விவகாரம் காரணமாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டாலும் உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!