போலீசார் எனக் கூறி புதுப்பெண்ணை கடத்தி 2 வாரங்கள் அடைத்து சீரழித்த கும்பல்..!


மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இவரது வீடு நலசோப்ரா பகுதியில் உள்ள பிரகதி நகரில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 6ந்தேதி ஒருவர் வந்துள்ளார். அவர் தன்னை போலீசார் என்றும் பெண்ணின் கணவரை கைது செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு தன்னுடன் வரவேண்டும் என கூறி அழைத்து சென்றுள்ளார்.

இதன்பின் மும்பையில் உள்ள மலாட் நகருக்கு ஆட்டோ ரிக்ஷாவில் கடத்தி செல்லப்பட்ட அவர் 8 நாட்கள் அங்கு சிறை வைக்கப்பட்டு உள்ளார். அதன்பின் மீரா சாலை பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் அவர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த இரு இடங்களிலும் குற்றவாளிகளில் 2 பேர் இளம்பெண்ணை 2 வாரங்களாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த குற்ற சம்பவத்தில் ஒரு பெண் உள்பட வேறு 3 பேரும் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், கடந்த 18ந்தேதி அவர்கள் பெண்ணை விடுவித்து விட்டனர்.

அந்த பெண் கடந்த 23ந்தேதி போலீசில் புகார் தெரிவித்து உள்ளார். அவர்கள் இது தொடர்புடைய பிரிவுகளில் 5 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் இன்று வரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!