இன்று முதல் பொளந்து கட்டப் போகும் வெயில் – வானிலை மையம் ஷாக் தகவல்..!


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடைக்கால தொடக்க அறிகுறியாக வெயில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெயில் கொடுமை இன்று முதல் அதிகரிக்கும் என்றும், வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு குறைந்த அளவு வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப சலனம் காரணமாக நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!