படுக்கைக்கு வர மாட்டேங்குறார் – புதுக்கணவர் பற்றி தீபிகா படுகோனே ஓபன் புகார்!


பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. இவர் சக நடிகரான ரண்வீர் சிங்கை காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இவர்கள் 2 பேரும் ஃபெமினா பியூட்டி அவார்ட்ஸ் 2019 விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில், இந்த ஆண்டுக்கான அழகான தம்பதியர் விருது,ரண்வீருக்கும், தீபிகாவுக்கும் வழங்கப்பட்டது. விருதை வாங்குவதற்காக, இருவரும் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

விழா மேடையில், தீபிகா மைக் பிடித்து பேசினார். அப்போது, ”ரண்வீர் சிங் ரொம்ப மோசம். குளிக்கப் போனால் ரொம்ப நேரமாகிறது. ஆடை அணிய ரொம்ப நேரம் எடுத்துக் கொள்கிறார். இப்படியே நேரம் கடத்தும் அவர், படுக்கைக்கு வரவும் ரொம்ப நேரம் செலவழிக்கிறார்,” என்றார்.


உடனே, ரசிகர்கள் எல்லாரும் உற்சாகமாகக் கைதட்ட, மறுப்பு தெரிவித்த தீபிகா, உறங்க வருவதற்கு அவர் நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறார், வேறு எதுவும் தப்பான அர்த்தம் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று வெட்கத்துடன் கூறினார்.

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுபற்றிய புகைப்படங்களையும்

தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பகிர்ந்துள்ளனர்.

இவர்கள் 2 பேரும் தற்போது, ”தீப்வீர்” (தீபிகா படுகோனே, ரண்வீர் சிங்) என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!