பக்தரின் பிளேக் வியாதியை நீக்கிய சீரடி சாயிநாதரின் உதி வைத்தியம்..!


ஒரு முறை மும்பையிலுள்ள தானே ரயில் நிலையத்தில் தனது மனைவியுடன் ரயில் வண்டியை எதிர்பார்த்து காத்திருந்தார் சாயி பக்தரான நானா சாஹேப். அப்போது, அவரை அடையாளம் தெரிந்து கொண்ட மற்றொரு பக்தர் அவரிடம் வந்து, நல்ல வேளையாக நான் உங்களைச் சந்தித்தேன். என் நண்பரின் மகள் பிளேக் வியாதியினால் அவதிப்படுகிறாள். பாபாவின் உதி கிடைத்தால் சிறப்பாயிருக்கும்.

சிறிது உதி கிடைத்தால் அந்த குழந்தைக்கு இட்டு விடுவேன் தருகிறீர்களா என்று கேட்டார். அந்தோ பரிதாபம். அந்த சமயம் பார்த்து அவரிடம் உதி இல்லை. ஒரு கணம் பாபாவை நினைத்தார். தரையிலிருந்த மண்ணை எடுத்து பாபாவை தியானம் செய்து, அவரது மனைவியின் நெற்றியிலிட்டார். போ. குழந்தைக்கு உடம்பு சரியாகியிருக்கும் என்று அவரை வழியனுப்பி வைத்தார்.


நம்பிக்கையுடன் அவர் தனது நண்பனின் வீட்டுக்குச் சென்றபோது, அந்த குழந்தைக்கு உடம்பு பரிபூரண குணமாகியிருந்தது. என்னே பாபாவின் கருணை! நாமும் சாயி நாதரின் பாதம் பணிந்து, அவரது அனுக்ரஹத்தை பெற்று நல்வழி அடைய முயலுவோமாக. அனுதினமும் சாயி நாமம் ஜெபித்து சரணடைவதுடன் சாயி சன்னதி சென்று நம்மால் இயன்ற பணிகளை (உதவிகளை) செய்வோமாக.

சாயி சன்னதியில் கிடைக்கும் உதி என்ற விபூதி மருத்துவ குணமுடையது. ஒரு சிறிய பாக்கெட்டை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளவும். வெளியில் செல்லும்போது இந்த மகிமை வாய்ந்த சக்தி மிகுந்த உதியை நெற்றியில் இட்டு கொள்ளவும். நம்பிக்கையுடன் சிறிது தண்ணீரில் கலந்து உட்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.–Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!