கடைசி நேரத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒரே வீரர் இவர்தான்..காரணம் என்ன..?


தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட வாகனத்தில் ஏறிய ஒரு ராணுவ வீரர் பின்னர் வாகனம் கிளம்புவதற்கு முன்னர் அதிலிருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.

காஷ்மீரில் கடந்த 14ஆம் திகதி 2500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது, வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்துடன் ராணுவ வீரர்களின் கான்வாய்க்குள் புகுந்த அடில் அகமது என்ற தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான்.

இதில் 45 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனத்தில் சக வீரரான தகா பெல்கர் என்பவரும் ஏறியுள்ளார்.

இவருக்கு வரும் 24ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக விடுமுறைக்கு பெல்கர் விண்ணபித்த நிலையில் அது முதலில் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து சகவீரர்களுடன் பயணிக்க வாகனத்தில் அவர் ஏறினார்.

வாகனம் கிளம்ப தயாரான போது, பெல்கரின் விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக அவருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்து அவர் கீழே இறங்கினார்.

இதன்பின்னர் வாகனங்கள் கிளம்பிய நிலையிலேயே அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பெல்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தற்போது தெரியவந்துள்ளது.-Source: lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!