12 ராசிகளிலுமே மிகமிக ஆபத்தானவர்கள் இவர்கள் தானாம்.! உஷாராவே இருங்க..!!


ஜோதிடம், அதிர்ஷ்டம், ராசி பலன்கள் ஆகியவற்றை பலர் நம்புவதுண்டு. சிலர் அதை மூட நம்பிக்கை என கேலி செய்வதும் ஒதுக்குவதும் உண்டு.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். சர்வதேச புலனாய்வு நிறுவனம் தங்களிடம் உள்ள குற்றவாளிகளின் பட்டியலை எடுத்து எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான குற்றவியல் செயல்களில் ஈடுபடுகிறார்கள்?

உலக அளவில் ஆபத்தான குற்றங்களைப் புரிபவர்கள் எந்த ராசிக்காரர்கள் என்று ஒரு ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.

அந்த ஆய்வில் அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்று பட்டியலிட்டுக் காட்டியுள்ளனர்.


தனுசு, மேஷம், சிம்மம்

இந்த மூன்று ராசிக்காரர்களில் தனுசு ராசிக்காரர்கள் தான் அதிக குற்றச் செயலில் ஈடுபட்டவர்களாக இருக்கிறார்கள்.

மேஷ ராசிக்காரர்கள் அதிக கனமான ஆயுதங்களை வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அதேசமயம் மேஷ ராசிக்காரர்கள விட சிம்ம ராசிக்காரர்கள் மிக ஆபத்தானவர்களாகவே இருக்கிறார்கள்.


துலாம், மிதுனம், கும்பம்

இந்த மூன்று ராசிகளில் மற்ற இரண்டு ராசிக்காரர்களை விட துலாம் ராசிக்காரர்கள் மீதுதான் அதிக அளவிலான குற்றங்கள் பதிவாகியுள்ளன.

ஏமாற்று வேலை செய்து மாட்டிக் கொள்பவர்களில் பெரும்பாலும் மிகுன ராசிக்காரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு துரோகம் செய்தவர்களை மிகக் கொடுமையாக, பழிக்கு பழி வாங்கும் குணமுடையவர்களாக கும்ப ராசிக்காரர்கள் இருக்கிறார்கள்.

மகரம், கன்னி, ரிஷபம்

நினைத்ததை அடையும் குணம் கொண்டவர்கள் மகர ராசிக்காரர்கள். அதனாலேயே தாங்கள் செய்யும் குற்றங்களுக்கு ஏற்றபடி நிச்சயம் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

கன்னி மற்றும் ரிஷப ராசிக்காரர்கள் இதுபோலத்தான். ஆனால் குற்ற விகிதம் மகர ராசிக்காரர்களை விடவும் குறைவு தான்.


கடகம், விருச்சிகம், மீனம்

இந்த மூன்று ராசிக்காரர்களில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த 12 ராசிகளிலுமே கடக ராசிக்காரர்கள் தான் மிகமிக ஆபத்தானவர்கள் என்று கூறப்படுகிறது. பணத்துக்காக எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் துணிந்து ஈடுபடுபவர்களாக இவர்கள் தான் இருக்கிறார்கள்.

விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் முறையே இதில் கடகத்தை அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!