கேரள மாநிம் மலப்புரம் மாவட்டம் தென்கிப்பாலம் போலீசார் 9 வயது சிறுவன் ஒருவனை 36 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இந்த விவகாரம் கடந்த வாரம் உள்ளூர் டாக்டர் ஒருவர் மூலம் வெளிவந்து உள்ளது. டாக்டர் குழந்தைகள் உதவி மையத்திற்கு இந்த தகவலை கொடுத்து உள்ளார். குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் சிறுவனை மீட்டு அவனிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுக் கொண்டு பின்னர் அதனை போலீசாருக்கு தெரிவித்து உள்ளனர்.
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சிறுவன் ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு உள்ளான். இதனால் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளான். அந்த சிறுவனின் மாமாவின் மனைவி இத்தகைய கொடுமையை செய்து உள்ளார் என கூறினர்.
சமீபத்தில் 9 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்ததாக கூறி எர்ணாகுளத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!