சபரிமலைக்கு செல்லவுள்ள ஐயப்ப பக்தர்கள் சந்தனப்பொட்டு வைப்பது ஏன் தெரியுமா..?


ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்தவுடன் புருவமத்தியில் சந்தனத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்தவுடன் புருவமத்தியில் சந்தனத்தை வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனத்தை நெற்றியில் பார்த்ததுமே இவர் மாலை அணிந்த சாமி என்று மற்ற ஐயப்ப சாமிகள் தெரிந்து கொள்வார்கள்.


நெற்றியில் பொட்டு வைக்குமிடத்தில் பிட்யூட்டரி எனும் சுரப்பி உள்ளது. பீனியல் சுரப்பி நெற்றிக் கண்ணைப் போலவே செயல்படுகிறது. அதன் அமைப்பும் ஒரு கண்ணைப் போன்றே இருக்கும். இது உடலையும், உள்ளத்தையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. வெளிப்புறம் நடக்கும் அனைத்தையும் அறிந்து கொள்ளக்கூடியது இச்சுரப்பி.

இது ஆன்மா இருக்குமிடம் என்று கருதுவதால் இதை மனோன்மணி என்று அழைக்கிறார்கள். இது சிறப்பாக இயங்கினால் ஞானதிருஷ்டி சித்திக்கும். இதை குண்டலினி யோகம் மூலம் தான் தூண்ட முடியும்.-Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!