3வது டி20 கிரிக்கெட், தொடரை வெல்லப்போவது யார்? டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியது.

இதன்பின் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் பந்து வீச்சாளர் குல்தீப் சேர்க்கப்பட்டு உள்ளார். சஹால் நீக்கப்பட்டு உள்ளார். இதேபோன்று நியூசிலாந்து அணியில் பெர்குசனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. பிளேர் டிக்னெருக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.